ஆவியோடும் கருத்தோடும் ஜெபம் பண்ணுங்கள்.
-1 கொரிந்தியர் 14 :15

இக்கட்டுகளில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள்.
-சங்கீதம் 141:  5

துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள்.
-சங்கீதம் 39: 1- 3

தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள்.
-மத்தேயு.26:42

எல்லா நகரங்களும் கூடி எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்கள்.
-2 நாளாகமம் 20: 1- 24

அதிகாலையில் ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு.1:35

பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு 11:24

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்;
-மத்தேயு 26:41

ஜெபம் பண்ணுவதில் ….. இடைவிடாமல் தரித்திருங்கள்
-அப்போஸ்தலர் 6 :4

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
-1 பேதுரு 4 :7

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (ஜெபம்) மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
-யாக்கோபு 5 :16

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
-கொலோசெயர் 4 :2

பெண்கள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில்,
தன் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
-1 கொரிந்தியர் 11 :13  

மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது எப்போதும் சந்தோஷத்தோடே ஜெபம்  பண்ணுங்கள்.
-பிலிப்பியர் 1 :4

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து ஜெபம் பண்ணுங்கள்.
-பிலிப்பியர் 4 :6

ஒருவர்பேரில் உண்டான அவரவர் குறையை மன்னித்து ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு 11:25

கூட்டமாய், கூடி ஜெபம் பண்ணுங்கள்.
-லூக்கா 1:10

தனிமையான இடத்தை தேர்ந்தெடுத்து ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு 6: 46

சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள்.
-லூக்கா.18:1.

அதிக ஊக்கத்தோடு ஜெபம்பண்ணுங்கள்.
-லூக்கா.22:44

ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.
-ரோமர்.12:12.

சபைக்காக சபையினருக்காக ஜெபம் பண்ணுங்கள். பவுல் செய்தார்.
– எபே 3:14-21

பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்து ஜெபம் பண்ணுங்கள்.
-எபேசியர் 6:18

ஆவியிலே ஜெபம் பண்ணுங்கள்.
எபே.6:18

எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
-1 தீமோ.2:1

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

  • மத்தேயு 5:44

நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற
உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
-மத்தேயு 6:6

நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்;
-மத்தேயு 6:7

நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம்
என்று விசுவாசியுங்கள்..
-மாற்கு 11: 24

கடைசிக் காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.
-மாற்கு 13: 33


★ நீங்கள் இரண்டு பேரோ மூன்று பேரோ ஜெபிக்கும்போது கர்த்தர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.

★ இயேசு கிறிஸ்து முழு இரவும் ஜெபித்தார்.

★ தானியேல் தன் சிறிய வயதிலும் தினம் மூன்று வேளை ஜெபிக்கிறவராய் இருந்தார்.

★ அன்னாள் என்ற மனுஷி (ஏழு வருடம் கணவருடன் வாழ்ந்து (விதவையானவர்) எண்பத்துநாலு வயதிலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். (லூக்கா 2: 37)

ஜெப வீரர்கள் :

★ பவுல் தன் ஊழியம் முழுவதிலும் விசுவாசிகளுக்காகவும் ஊழியர்களுக்காவும் சபைக்காகவும் 69 வயது வரை ஜெபித்துக்கொண்டே இருந்தார். ஜெப வீரராய் இருந்தார். (எபே 3: 14- 21)

★ யோசேபாத் ராஜாவும் இஸ்ரவேலின் எல்லா நகர மக்களையும் கூட்டி ஜெபித்தார். (2 நாளா 20) யோசேபாத்தும் ஜெப வீரரே.

★ சாத்ராக் – மேஷாக் – ஆபேத் நேகோ மூன்று பேரும் நெபுகாத்நெசர் சிலையை வணங்க முடியாது என உறுதியாய் இருந்தார்கள். அக்கினி சூளையில் போட்டும் எரியாதபடி கர்த்தர் காப்பாற்றினார். இவர்களும் ஜெப வீரர்களே.

நீங்கள்…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *