நமக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒன்றேயொன்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மாத்திரமே!

ஆதாமுக்குள்ளே எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

நாம் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, அவருக்குள்மரிக்கும்போது நாம் உண்மையிலேயே மரிப்பதில்லை; மாறாக, கிறிஸ்துவுக்குள் நித்திரையடைகிறோம். கடைசி எக்காளம் தொனிக்கும்போது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; உயிரோடிருக்கும் நாமும் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவோம். இதுவே இன்று எமக்குள் இருக்கும் நம்பிக்கை.

மரணம் என்பது கிறிஸ்துவுக்குள் வாழுபவனுக்கு ஒரு முடிவல்ல. நித்திய நித்தியமாய் கிறிஸ்துவோடு வாழ அழைக்கப்பட்ட அவனுக்கு இது ஒரு புதிய ஆரம்பம். ஆகையால் இன்றே எமது வாழ்வைச் சீர்தூக்கிப்பார்ப்போம்.

மரணத்தை ஜெயித்து வெற்றி வேந்தராய் நமது ஆண்டவரின் உயிர்த்தெழுந்த நாளை நினைவுகூரும் இந்த நாளில், நாமும் மரணத்தை வெற்றிகொள்ளக்கூடிய நிலையில் விசுவாசத்தில் உறுதி கொண்டிருக்கிறோமா?

இந்த நாள் நாம் வெற்றியோடு சந்தோஷத்தோடு நினைவு கூரவேண்டிய ஒருநாள்.

‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.” 1கொரிந்தியர் 15:57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *