தவறான உபதேசங்களுக்கு எச்சரிக்கை!
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

தற்போத சபை போதிக்கின்ற போதனைகள் தவறு என்றும், சபைகளில் #நியாயபிரமாணம் தான் போதிக்கப்படுகின்றது என்றும் அங்கே #கிருபை போதிக்கப்படுவதில்லை என்றும் வேதத்தில் அனேக காரியங்கள் தவறாக எழுதப்பட்டிறுக்கின்றது என்றும் மக்களை குழுப்பும் குழு தற்போது பிரபலமடைந்து வருகின்றனர். இவர்களின் தலைமையகம் கொரியாவில் உள்ளது என்று கூறப்படுகின்றது.


இவர்களின் நூதன உபதேசங்களில் சில..

இயேசு கிறிஸ்து சிலுவையில் யாவையும் செய்து முடித்து விட்டார். எனவே நாம் கிருபை அல்லது புதிய உடன் படிக்கைக்கு கீழ் வந்து விட்டோம். ஆகவே..

1.நாம் #ஜெபிக்க வேண்டாம்.

2.#உபவாசிக்க வேண்டாம்.

3.கர்த்தருக்கு முன்பாக #முழங்கால் படியிடுவது ஒரு பாரம்பரியம்.

4.ஆராதனையில் அனைவரும் நடனம் ஆட வேண்டும்.

5.பிரசங்கத்தில் ஆமேன் சொல்லுவதற்க்கு பதில் #விசில் அடிக்கலாம்.

4.இரட்சிக்கபட்ட பின் பாவம் செய்தால் ஆண்டவரிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. .

5.நாம் செய்யப்போகின்ற பாவத்தை இயேசு முன்னதாகவே மன்னித்து விட்டார்..

6.நாம் கடவுளிடம் ஜெபிக்க வேண்டாம், நாம் #கட்டளையிட்டால் எல்லாம் நடக்கும்.

7.நம் சபைக்கு வருபவர்களுக்கு #மரணம் ‌சம்பவிக்காது. பரலோகம், நகரம் பற்றி பேச்சே கிடையாது.

இயேசு வரும் வரை உயிர் வாழலாம் என போதிப்பார்கள்.

8.நாம் விலை உயர்ந்த #உடை #வாகனம், #வீடுகள் வைத்திருப்பதே தேவ சித்தம் என்று ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் #பண ஆசையை தூண்டுவார்கள்.

9.புறஜாதியினருக்கு #சுவிசேஷம்# அறிவிப்பது தேவையற்றது. நாம் பணக்காரர்கள் ஆனால் போதும் அவர்களாகவே நமது சபைக்கு வந்து விடுவார்கள் என்று பயிற்சி கொடுக்கின்றார்கள்.

10.மற்ற சபையினரிடம் உங்கள் சபையில் #நியாயப்பிரமாணம்# போதிக்கப்படுகின்றது. நீங்கள் #கிருபைக்கு வாருங்கள் என்று கூறி நம் சபைக்கு அழைக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது

11. நமது தமிழ் வேதத்தில் அநேக #தவறுகள் உண்டு என்றும் வசனத்தை தவறாக போதிக்கும் போது எபிரேய அல்லது கிரேக்க வார்த்தைகள் பயன்படுத்துவார்கள்.

அல்லது… ஆங்கில வேதத்தில் இந்த #வெர்ஷன் வேறு விதமாய் கூறுகிறது என்று கூறி வஞ்சிப்பார்கள். விரைவில் ஒரு புதிய வேதாகமத்தை தங்கள் விருப்பப்படி உருவாக்கவிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

கடைசி காலத்தில் வருவார்கள் என்று கூறப்பட்ட அந்தி கிறிஸ்துவின் ஆவி #sleeper cell ஆக சபைக்குள் மறைமுகமாக செயல் பட்டுக் கொண்டிருக்கின்றது.
சபைகளும் விசுவாசிகள் யாவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.

*”தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்,*

*விழித்திருங்கள். ஏனெனில்… *உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். ( 1 பேதுரு -5:8)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *