அவசரப்பட்டால் காரியம் ஆகாது
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

”வேகமாக வெற்றி கிடைக்க எவ்வளவு உழைக்க வேண்டும்?” என்று கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.

“ஏன்? என்னாயிற்றூ?”

“நான் தொழில் துவங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் என்னால் நான் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” என்று படபடப்பாய் சொன்ன இளைஞனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.

‘வண்டி நிறைய தேங்காய்களுடன் ஒருவன் பயணித்துக் கொண்டிருந்தான். வேறு ஊரிலிருக்கும் கடைக்கு தேங்காய்களை அவன் கொடுக்க வேண்டும். அவனுக்கு அந்த ஊருக்கு சரியான வழி தெரியாது. அதனால் விசாரித்து போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி வழி கேட்டான். அவனுக்கு வழி சொன்னவர் ஒரு பெரியவர். ஒரு நேர் சாலையைக் காட்டி அந்த வழியாக போனால் முக்கால் மணி நேரத்தில் ஊரை அடைந்துவிடலாம் என்றார். உடனே வண்டியோட்டி நல்ல வேகமாக போனால் இன்னும் சீக்கிரமாக போய்விடலாமா என்று கேட்க, அந்தப் பெரியவர், ‘ இல்லை.வேகமாக போனால் ஒன்றரை மணி நேரமாக்கிவிடும்’ என்று பதில் சொன்னார். வண்டியோட்டிக்கு எரிச்சலாகிவிட்டது. பெரியவர் தன்னை கிண்டலடிக்கிறார் என்று நினைத்தான். வண்டியை வேகமாக கிள்ப்பினான். நல்ல வேகத்தில் வண்டியை ஓட்டினான்.

சாலை கரடு முரடாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் சொன்ன நேரத்துக்கு முன்பாக சென்று விட வேண்டும் என்று வேகமாக வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு திருப்பத்தில் பள்ளம் ஒன்று இருக்க, இவனால் வண்டியை கட்டுப்படுத்த இயலவில்லை.வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் இறங்க வண்டி சாய்ந்தது. தேங்காய்கள் சாலையில் சிதறி ஓடின. வேறுவழியில்லாமல் வண்டியை நிறுத்தி சிதறிக்கிடந்த தேங்காய்களையெல்லாம் எடுத்து வண்டியில் போட்டான்.அத்தனையையும் எடுத்து அடுக்க அவனுக்கு அரை மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அப்போது பெரியவர் எதை குறிப்பிட்டு நேரக் கணக்கு சொன்னார் என்பது அவனுக்கு உரைத்தது.

இந்தக் கதையை சொன்னதும் வந்தவனுக்கு தான் எப்படி வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது புரிந்த்து.

அப்போது குரு அவனுக்கு சொன்ன பழமொழி: அவசரப்பட்டால் காரியம் ஆகாது.

என் அன்பு வாசகர்களே,
இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அவசரம். படிக்கிற பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் படித்து முடிக்க வேண்டும் என்றும், படித்து முடித்த பிள்ளைகளுக்கு சீக்கிரத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்றும், வேலை செய்பவர்களுக்கு சீக்கிரத்தில் நன்கு சம்பாத்தித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்றும் எல்லாரும் அவசரப்படுகின்றனர்.

ஊழியத்திலும் கூட பத்து இருபது ஆத்துமாக்களை கொண்ட சபை ஊழியர்கள் தாங்களும் பல இலட்சம் விசுவாசிகளின் போதகராய் பெரிய சபையின் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவை அனைத்தையும் நினைப்பது தவறில்லை ஆனால் எல்லாம் சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.

இவ்வளவு காரியங்களை சீக்கிரத்தில் பெற்று கொள்ள விரும்புகிற யாரும் தனக்கு சீக்கிரத்தில் வயதாக வேண்டும் என்று விரும்புவதில்லை காரணம் வயதாக வயதாக பெலன் குறைந்துவிடும் என்பதால்தான். எல்லாம் நாம் நினைப்பது போல சீக்கிரத்தில் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு வேதாகம உவமை இவ்வாறு கூறுகிறது,

தான் ஏதும் சொந்தமாய் கஷ்டப்பட்டு சம்பாதிக்காமல் தன்‌ தகப்பனுடைய ஆஸ்தியில் தனது பங்கை பெற்றுக்கொண்டு தன்‌ தகப்பனை விட்டு பிரிந்து தான் சீக்கிரத்தில் தன் தகப்பனை விட பெரியவனாய் வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நடந்ததோ தனக்கு போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால் தான் கொண்டு சென்ற பணம் முழுவதும் செலவழித்து விட்டது.

ஆம் நாட்கள் செல்ல செல்ல நம் அனுபவம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நபர்களை, சூழ்நிலைகளை சந்திக்கும் போது நம் அனுபவம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதுவே சீக்கிரத்தில் எல்லாம் கிடைத்துவிட்டால் நமக்கு எந்த அனுபவமும் இல்லாத காரணத்தினால் எல்லாவற்றையும் இழக்கக் கூடிய நிலை ஏற்படும். எனவே எல்லாவற்றிற்கும் அனுபவம் மிக மிக முக்கியம். வேதம் சொல்கிறது

11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

ஏசாயா 40:11

நம்மை மெதுவாய் நடத்தி தமது சொந்த மந்தையைப் போல நடத்துகிற தேவனிடத்தில் நம்மை சமர்ப்பிப்போம் நல்ல மேய்ப்பனாகிய தேவன் நம்மை சுகமாய் தங்க பண்ணுவார்.

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *