விசுவாசி! -(BELIEVER) என்பவர், இயேசு கிறிஸ்துவை தன் இருதயத்தில் கர்த்தராகவும், தன் ஆத்துமாவின் இரட்சகராகவும் முழு இருதயத்தாலும் நம்புகிறவர்.

(“விசுவாசி” என்பதற்கான கிரேக்க வார்த்தை – pisteuoo -என்பதாகும்)

விசுவாசிகளுக்கு ஒப்புமையாகக் வேதத்தில் கூறப்பட்டிருக்கிற காரியங்கள்:

  1. சம்பத்து (மல் 3.17)
  2. கொழுத்த கன்றுகள் (மல் 4:2)
  3. சூரியன் (நியா 5:31)
  4. பொன் (யோபு 23.10)
  5. கனிதரும் விருட்சம் (சங் 1)
  6. மான் (சங் 42:1)
  7. பச்சையான ஒலிவமரம் (சங் 52:8)
  8. பனைமரம் (சங் 92.12)
  9. கேதுருமரம் (சங் 92.12)
  10. நட்சத்திரங்கள் (தானி 12:3)
  11. கழுகுகள் (ஏசா 40:31; சங் 103:5)
  12. சீயோன் மலை (சங் 125)
  13. உப்பு (மத் 5:13)
  14. வெளிச்சம் (மத் 5:14)
  15. பட்டணம் (மத் 5:14)
  16. விளக்கு (மத் 5:14)
  17. கோதுமை (மத் 3:12-13)
  18. பாலகர் (மத் 11:25)
  19. மீன் (மத் 13:48)
  20. ஊழியக்காரன் (மத் 25.21)
  21. ஆடு (யோவான் 10; சங் 23)
  22. கிளை (யோவான் 15)
  23. ஆட்டுக்குட்டி (யோவான் 21)
  24. மாளிகை 1கொரி 3:9)
  25. பந்தயச்சாலையில் ஓடுகிறவர்கள் (1கொரி 9:24)
  26. சரீரத்தின் அவயவங்கள் (1கொரி 12 )
  27. நிருபங்கள் (2கொரி 3:1-3)
  28. ஸ்தானாபதிகள் (2கொரி 5:20)
  29. தூண்கள் (கலா 2:9; வெளி 3:12)
  30. போர்ச்சேவகர்கள் (2 தீமோ 2:3)
  31. மல்யுத்தம் பண்ணுகிறவன் (2 தீமோ 2:5)
  32. பாத்திரங்கள் (2 தீமோ 2:20)
  33. ஜீவனுள்ள கற்கள் (1பேதுரு 2:5)
  34. ஆவிக்கேற்ற மாளிகை (1பேதுரு 2.5)
  35. அந்நியர்களும், பரதேசிகளும் (1பேதுரு 2:11)
  36. பிள்ளைகள் (1யோவான் 21,12)

விசுவாசியின் மேன்மை எவ்வளவு என்று பாருங்கள்!

விசுவாசிக்கிறவர்களுக்கு பலன் உண்டு என்றும் வேதம் சொல்கிறதே…

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
(எபிரெயர் 11:6)

விசுவாசித்து பலனடைவோம்! விசுவாசத்தால் பெலனடைவோம்! ஆமென்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *