கொள்ளைநோய்க்கு(கொரோனா) எதிரான என் விசுவாச அறிக்கை:

நீதிமொழிகள் 18:21.
“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”.

நான் ஆண்டவரின் பிள்ளை – பயமேயில்லை

நான் கர்த்தருடைய பிள்ளை; என் ஆண்டவர் எனக்கு நல்லபரிகாரியாய் / ஔஷதராய் இருக்கிறார்; தெய்வீக ஆரோக்கியம் ஆண்டவர் எனக்கு கொடுத்த உரிமை சொத்து; என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற் ற இரத்தம் என் சரீரத்திற்குள் செலுத்தப்பட்டிருக்கிறபடியால், எந்தவொரு வாதையும், கொள்ளைநோயும்(கொரோனா), வியா தி பெலவீனங்களும் என்னையோ,என்குடும்பத்தையோ இனி தொட முடியாது;

என்னையும் என் குடும்பத்தையும் சுற்றிலும் தெய்வீக அக்கினியும், சுடரொளிப் பட்டயமும் உண்டு; நான் கர்த்தருடைய பாதுகாப்பின் வளையத்திற்குள் இருக்கிறேன். ஆகவே, எந்தவொரு துஷ்டநோய்களும் என்னையும் என் குடும்பத்தினரையும் தொடுவதற்கு அதிகாரமே இல்லை;

என்சரீரத்தை தீட்டுப்படுத்தவோ / தொடவோ
நினைக்கிற எந்தவொரு வாதையும், கொள்ளை நோயும், வியாதியும் என் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே அழிக்கப்பட்டுபோகும்; நான் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்திற்குள் மறைந்திருக்கிறேன்; என் ஜீவன் கிறிஸ்துவுக்கு ள் மறைந்திருக்கிறது; என் சுக வாழ்வை / செல்வ வாழ்வை / நீடிய வாழ்வை விரும்புகிறவர் என் ஆண்டவர்;

வாதை என்கூடாரத்தை அணுகாது.

இந்தபூமியிலே என்னை / என் சந்ததிகளை அழிக்கிறதற்கு எந்த பிசாசுக்கும், அந்தகார கிரியைகளுக்கும், விஷக்கிருமிகளுக்கும் அதிகாரம் கிடையாது; காரணம், ஆண்டவர் என்னை ஜீவாத்துமாவாக சிருஷ்டித்து, நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்படியாகவே இந்த பூமியில் என்னை வைத்திருக்கிறார்; என் ஆண்டவருடைய கரம் என்மேல் இருக்கிறது; வாதை என்கூடாரத்தை அணுகாது; என் வீட்டின் நிலைக்கால்களிலே ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தம் பூசப்பட்டிருக்கிறது. ஆகவே,சங்காரத் தூதன் என் வீட்டை நெருங்கமுடியாது; இயேசுவின் இரத்தம் என் வாழ்க்கையிலே ஜெயத்தை / சுகத்தை மாத்திரமே கொண்டுவரும்.

இந்த உலகத்தை காரிருள் மூடினாலும், என் மேலே கர்த்தருடை ய மகிமை உதிக்கும்; நீதியின் சூரியனாகிய என் தேவனுடைய செட்டைகளுக்குள் நானும் என் குடும்பமும் மறைந்திருக்கிறபடியா ல், அவருடைய செட்டைகளின் கீழ் இருக்கிற தெய்வீக ஆரோக்கியம் எனக்கும் உண்டு. நானும், கர்த்தர் எனக்கு கொடுத்த மனைவி / கணவர் / பெற்றோர் / பிள்ளைகளும், இந்த சமுதாயத்திலே / பட்டணத்திலே / தேசத்திலே அற்புதங்களாக அடையாளங்களாக இருக்கிறோம்;

ஆண்டவர் என் ஆத்துமாவைக் காப்பார்.

என்ஆண்டவர் இயேசு ஏற்கெனவே இந்த கொள்ளை நோயை (கொரோனா) கல்வாரி சிலுவையிலே எனக்காக சுமந்து தீர்த்துவிட்டார்; அவர் சுமந்த ஒரு நோயை நான் சுமக்க வேண்டிய அவசியமில்லை; அவர் தமது சுகமளிக்கும் வாக்குத்தத்தங்களை எனக்குத் தந்து, என்னை குணமாக்கி, அழிவுக்கு தப்புவித்துவிட்டார்; திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிற சாத்தானுக்கு என்னிடத்திலே ஒன்றுமேயில்லை, இடமேயில்லை;

நான் அனுபவிக்கும்படி என் ஆண்டவர் உரிமையோடு எனக்கு தந்திருக்கிற தெய்வீக சுகத்தை பிசாசு திருடவோ(அ) வஞ்சிக்கவோ முடியவே முடியாது; துர்ச்செய்தியை கேட்கிறதினால் நான் பயப்படவே மாட்டேன்; என் இருதயம் கர்த்தரை மாத்திரமே நம்பித் திடனாயிருக்கும்; என் தேவன் என்னையும் என் குடும்பத்தையும் சகல தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; என் ஆத்துமாவைக் காப்பார்; என் வாழ்க்கையின் எல்லையைக்குறிக்கிறதற்கு கொரோனா வைரஸ்-க்கு எந்த அதிகாரமுமில்லை; மாறாக, அதற்கு எல்லையை குறிக்கவே என்னை இந்த பூமியிலே வைத்திருக்கிறார்;

நன்மைகளும் கிருபையும் என்னைத் தொடரும்;

பரலோக தேவனின் ஒத்தாசை எனக்கு எப்பொழுதும் (24×7) உண்டு; என் ஜீவனுள்ள நாளெல்லாம் தெய்வீக நன்மைகளும் கிருபையும் மாத்திரமே என்னைத் தொடரும்; என் வாழ்நாளெல்லாம் எருசலேமின் வாழ்வை நான் காண்பேன்; என் தேவன் நீடித்தநாட்களால் என்னை திருப்தியாக்குவார்; அவருடைய இரட்சணியத்தை என் கண்கள் காணும்.

கிறிஸ்து இயேசுவுக்குள் நானும் என் குடும்பமும் தெய்வீக பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செழிப்போடும், தேவ வல்லமையோடும், அவருடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டு இன்றும் என்றும் கர்த்தருடைய வருகை மட்டும் வாழ்வோம்.

கிறிஸ்து இயேசுவுக்குள் இது என்னுடைய அசைக்க முடியாத நாவின் விசுவாச அறிக்கை! ஆமேன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *