நான் குடும்பத்திற்கு தலையானவன்.

அதனால் என் மனைவியை, என் சரீரமாக நேசிப்பேன்.

அவளைத் தாழ்வாக எண்ண மாட்டேன்.

நான் வைத்ததுதான் சட்டம் என்று எண்ணி, என் மனைவி எல்லாவற்றிலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று சாதிக்க மாட்டேன்!

என் மேலாண்மையை மனைவியின் மேல் நிலைநாட்ட தீவிரப்படாமல், என் மனைவியின் விஷயத்தில் எனது மேலான அன்பை நிலைநாட்டவே பிரயாசப்படுவேன்.

அதிகாரம்செலுத்துவதைவிட அன்பு காட்டுவதிலேயே அதிக கவனம் செலுத்துவேன்.

நல்ல செயல்களை மனந்திறந்து மெச்சவும் தயங்க மாட்டேன்.

நான் ஒரு கிறிஸ்தவ கணவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *