ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!

அந்த டெலிபோன் பூத் அருகில் இருந்த அந்த கடையின் முதலாளி அந்த பையன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்..!!

பையன்: “சார் உங்கள் தோட்டத்தை பராமரிக்கும் வேலையை எனக்கு கொடுக்க முடியுமா..”?
.
(
எதிர் பக்கத்தில் பேசுபவர்): “எனது தோட்டத்தை ஏற்கனவே ஒருவர் பராமரித்து வருகிறார்..”!!
.
பையன்: “சார் அவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுத்தால் போதும். நான் உங்கள் தோட்டத்தை பராமரித்து தருகிறேன்..”!!
.
ஆண்: “இல்லை இப்பொழுது பராமரிப்பவரின், பராமரிப்பில் தோட்டம் நன்றாக உள்ளது. நானும் அவர் வேலையில் மிகவும் திருப்தி அடைகிறேன்.”!!
.
பையன்: (இன்னும் பணிவோடு) சார் நான் உங்கள் வீட்டை பெருக்கி துடைத்து கூட தருவேன்..!!
அதற்காக தனியாக எனக்கு சம்பளம் தர வேண்டாம்..”!!
.
ஆண்: “வேண்டாம்..! நன்றி“.!!
.
அந்த பையன் முகத்தில் சிரிப்போடு டெலிபோன் ரிசிவரை வைத்து விட்டு திரும்பினான்.!!
.
.
அந்த கடை முதலாளி அவனிடம்., “எனக்கு உன்னுடைய அணுகுமுறையும்தோல்வியையும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்ளும் விதமும் பிடித்து இருக்கிறது.. நான் உனக்கு வேலை தருகிறேன் வருவாயா..”? என்றார்.!
.
பையன்: “நன்றி..! எனக்கு வேலை வேண்டாம்“..!!
.
கடை முதலாளி: “இவ்வளவு நேரம் வேலைக்காக மன்றாடிக் கொண்டிருந்தாயே..”?
.
பையன்: “இல்லை சார் நான் நன்றாக வேலை செய்கிறேனா என்று தெரிந்து கொள்ளத்தான் இப்படி செய்தேன்..!!

எதிர் முனையில் பேசியவரின் தோட்டத்தை பராமரிக்கும் தோட்டக்காரன் வேறு யாரும் இல்லை, அது நான் தான்.!!!
.
இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு“.!!
.
நான் அப்படி செய்வேன்.. இப்படி செய்வேன்.. என்று கூறுவது தற்பெருமை..!!

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்

By தமிழ் கிறிஸ்தவன்

தமிழ் கிறிஸ்தவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *